சுமையில்லா ரயில்வே பட்ஜெட்-லாலு உறுதி
ஜபுவா (மத்தியப் பிரதேசம்): இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டும் மக்களுக்கு மிகவும் சாதகமான, ஏழைகளுக்கு ஆதரவான பட்ஜெட்டாகவே இருக்கும் என ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இரு ரயில் திட்டங்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார். அதில் பேசிய லாலு,
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் யாரையும் சிரமத்துக்கு ஆளாக்க மாட்டேன். ரயில்வே பட்ஜெட்டை நான் படிக்கும்போது அதை டிவியில் உன்னிப்பாக கேளுங்கள். எல்லாவற்றையும் நான் இப்போதே சொல்ல முடியாது. நாடாளுமன்ற விதிகளுக்கு நான் கட்டுப்பட்டாக வேண்டும்.
சுருக்கமாக சொன்னால் இந்த பட்ஜெட்டும் மிகவும் சாதகமான, ஏழைகளுக்கு ஆதரவான ஒன்றாக இருக்கும் என்றார் லாலு.
லாலு ரயில்வே அமைச்சாரன பின்னர் பட்ஜெட்டு பட்ஜெட் கட்டணங்களைக் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ரயில்வேயை பெரும் நஷ்டத்தில் இருந்தும் மீட்டுக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications