ஜெ. மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு-கமிஷனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

தலித்களுக்கு அரசு வழங்கிய சுமார் 53 ஏக்கர் நிலத்தை அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து நீதி விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சித்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் திமுக அரசு அமைத்த கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், அரசு அமைத்த கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில் சித்ராவின் மனுவுக்கு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர், தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications