லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓவுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: லஞ்ச வழக்கில் சிக்கிய வி.ஏ.ஓவுக்கு மீண்டும் பணி வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பிச்சை, லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்பு இவரை மாவட்ட நிர்வாகம் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் பிச்சையை 2004ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து திருச்சி ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பிச்சை தாக்கல் செய்த மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
மனம் தளராத பிச்சை மீண்டும் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் ஏற்று வழக்கை விசாரித்து அவரை விடுதலை செய்துள்ளது.
இந் நிலையில் தனக்கு சம்பள பாக்கி, மற்றும் மீண்டும் பணி வழங்க கோரி பிச்சை திருச்சி ஆர்.டி.ஓவிடம் மனு அளித்தார். ஆனால் அந்த கோரிக்கையை ஆர்.டி.ஓ. நிராகரித்துவிட்டார்.
இதை எதிர்த்து பிச்சை மீண்டும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, பிச்சைக்கு மீண்டும் பணி வழங்கவும் அவரது சம்பள பாக்கியை உடனே வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications