'மப்'பில் வந்த போலீஸ்காரர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு கைதியை அழைத்து வந்த போலீஸ்காரர், குடிபோதையில் வந்து, கோர்ட் வளாகத்திற்குள் சுருண்டு விழுந்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கைதியுடன் வந்த போலீஸ்காரரே இப்போது கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ராமூர்த்தி. வெற்றி வேல் என்ற கைதியை காவல் நீட்டிப்புக்காக திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது ராமமூர்த்தி நல்ல போதையில் இருந்துள்ளார். தட்டுத் தடுமாறி கோர்ட் வளாகத்திற்குள் நடந்து வந்த ராமமூர்த்தி ஒரு கட்டத்தில் போதை அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸுக்குத் தகவல் பறந்தது. போலீஸார் ராமமூர்த்தியை தட்டி எழுப்பி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications