For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து-2 பேர் பலி, 10 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரியில் இருந்து ஓசூர் சென்ற கர்நாடகா அரசுப் பேருந்தும், ஓசூரில் இருந்து தர்மபுரி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் இன்று காலையில் கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒன்னல்வாடி என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 7 பயணிகளும், கர்நாடக அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பயணிகளும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Story first published: Saturday, February 9, 2008, 15:29 [IST]