For Daily Alerts
Just In
பாபா ஆம்தே உடல் அடக்கம் செய்யப்பட்டது
பாபா ஆம்தே நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94. அவரது உடல் அடக்கம் இன்று அவரது ஆனந்தவன் ஆசிரமத்தில் நடைபெற்றது.
ஆசிரம வளாகத்தில் உள்ள மூங்கில் தோட்டத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கல்லறையில் அவரது உடல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆம்தேவின் கடைசி விருப்பப்படி அவரது உடல் எரியூட்டப்படவில்லை. மாறாக அடக்கம் செய்யப்பட்டது.
21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதைகளுடன் ஆம்தேவின் உடல் அடக்கம் நடந்தது.
Comments
Story first published: Sunday, February 10, 2008, 17:33 [IST]