தமிழகத்தில் பரவலாக மழை
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பரவலாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
சென்னையில் பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்தது. அதேபோல மதுராந்தகம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று போலவே இன்றும் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.
தமிழகத்தின் மீது வளி மண்டல அழுத்தம் காணப்படுவதால்தான் இந்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வளி மண்டல அழுத்தம் தொடருவதாகவும், எனவே மழையும் தொடரும் எனவும் அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications