லாலுவுக்கு கன்னட அமைப்பு கருப்புக் கொடி
பெங்களூர்: பெங்களூர் வந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு, கன்னட ரக்சனே வேதிகே என்ற கன்னட அமைப்பினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு ரயில்வே பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி சமீபத்தில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ரயில்வே அலுவலகங்களுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில் பெங்களூர், யஷ்வந்த்பூர் மாடல் ரயில் நிலையத்தைத் தொடங்கி வைக்க லாலு பிரசாத் இன்று பெங்களூர் வந்தார்.
ரயில் நிலையத்திற்கு லாலு பிரசாத் வந்தபோது அங்கு கூடியிருந்த கன்ன ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 30 பேர் லாலுவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுதாரித்த போலீஸார் அனைவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் நிகழ்ச்சியில் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ரயில்வே பணிகளில் ஆள் எடுக்கும் முறையில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. அகில இந்திய அளவில்தான் ஆளெடுப்பு நடக்கிறது.
ரயில்வே பணியில் சேர ஒவ்வொரு இந்தியருக்கும் முழு உரிமை உண்டு. எனவே கன்னடர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக கூறுவதில் அர்தமத் இல்லை.
சமீபத்தில் மும்பையில், வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்தது. அனைத்து இந்திய மாநிலங்களையும் போல மகாராஷ்டிரமும், இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார் லாலு.












Click it and Unblock the Notifications