தமிழகத்தில் இன்று கன மழை பெய்யலாம்!
சென்னை: தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரங்களுக்குள் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். அதே நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சிவகிரி, ராஜபாளையத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்தது.
இன்று விருத்தாச்சலம், ஆலங்குடி, மதுரை, திருபுவனம், திருத்தணி, திருமயம், சிதம்பரம், திண்டிவனம் உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. சற்றே பலத்த காற்று வீசுகிறது. வெயில் வருவதும், போவதுமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications