இராக்கில் கார் குண்டு வெடித்து 33 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: வடக்கு இராக்கில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்ததில் 33 பேர் பலியாகினர்.
வடக்கு ஈராக்கின் பாலாட் என்ற இடத்தில் மக்கள் நெருக்கும் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி அருகே நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் பரிதாபமாக உடல் சிதறி இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சஜர் ராபர்ட் கேட்ஸ் ராணுவன் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக இப் பகுதிக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications