திருவண்ணாமலை-பெங்களூரைச் சேர்ந்த குடும்பம் நீரில் மூழ்கி பலி
திருவண்ணாமலை: பெங்களூரைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருவண்ணாமலை மாவட்டம் கோலப்புனம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் லதா (31), அமுதா (29), கில்பர்ட் குளோவ் (12), முனியம்மாள் (40), மோனிஷா (10). அனைவரும் திருவண்ணாமலையில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.
வழியில் கோலப்புனம் கிராமத்தில் முகம் கழுவுவதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கிருந்த பழைய கல் குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரைப் பார்த்து அங்கு சென்று முகம் கழுவினர்.
அப்போது அவர்களுடன் இருந்த நான்கு வயதுக் குழந்தை தடுமாறி தண்ணீரில் விழுந்து விட்டது. இதைப் பார்த்துப் பதறிய ஐந்து பேரும் ஒருவர் பின் ஒருவராக குளத்தில் இறங்கி குழந்தையைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் குவாரிக்குள் மூழ்கி விட்டனர்.
இதில் ஐந்து பேரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications