மதுரை ரயில் நிலையத்தில் போலீசை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் மீது ரயில்வே ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களான ஜான்சனும் மற்றொருவரும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை திருடியுள்ளனர்.
அவர்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரயில்வே ஊழியர்கள் கைது செய்ய்பபட்டதை கண்டித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனை சேர்ந்த ஊழியர்கள் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்.
அப்போது ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சங்கரநாராயணன் என்ற போலீஸ்காரரை தாக்கினர்.
இதனால் இன்று காலையில் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications