சென்னையில் வெளி மாநிலத்தவர்கள் கண்காணிப்பு
சென்னை: சென்னையில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள் மீது போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கியிருப்போர் மீது போலீஸார் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான உத்தரவு அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை தீவிரமாக கண்காணிக்கும்படி போலீஸாரை அறிவுறுத்தியுள்ளோம்.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் தங்களது அலுவலகங்களை அமைத்துள்ளனர். இந்த நிறுவனங்களின் கட்டுமான் பணி உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் வெளி மாநிலத்தவர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களில், தீவிர கண்காணிப்புகாரணமாக, 124 வழக்குகளில் முடிவு தெரிய வந்துள்ளது. பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 148 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செயய்ப்பட்டுள்ளது.
அதேபோல, ரூ. 3 கோடி மதிப்புள்ள திருட்டு விசிடிக்களும், கம்ப்யூட்டர்களும் போலீஸ் வேட்டையில் சிக்கியுள்ளது.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு போலீஸார் இடையூறாக இருக்க மாட்டார்கள். அதேசமயம், அத்துமீறுவோர், பொது இடங்களில் தவறாக நடந்து கொள்வோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் நாஞ்சில் குமரன்.
-
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications