கன்னட அமைப்பினர் ஆவேசம் - பெங்களூர் ரயில்வே அலுவலகம் சூறை

தென் மேற்கு ரயில்வேயில் கன்னடர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் தரப்படுவதில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி கன்னட ரக்சன வேதிகே அமைப்பு இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அவர்கள் அடிக்கடி பெங்களூர் ரயில் நிலையம், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை தாக்கி நொறுக்கி வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூர் யஷ்வந்தபூர் மாதிரி ரயில் நிலையத்தைத் தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, ரயில்வே பணிகளில் பிராந்திய அடிப்படையில் பணிகள் வழங்க முடியாது. இது அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் பணி. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் என பிரித்து வழங்க முடியாது என்றார்.
லாலுவின் இந்தப் பேச்சால் கொதிப்படைந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று பெங்களூர் கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர்.
கம்ப்யூட்டர்கள், கண்ணாடிகள், மர மேசைகள், இருக்கைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர். யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
லாலுவைக் கண்டித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் சார்பில் அவரது கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications