நில மோசடி: ஆர்டிஒ-தாசில்தார் மீது வழக்குப் பதிவு!
கொடைக்கானல்: கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.டி.ஒ, தாசில்தார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கிருஸ்தவ நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கொடைக்கானல் பர்ஹில் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு அங்கீகாரப் பிரதியாக அந்தோணி குரூஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இந்த நிலத்தை கடந்த 1971ம் ஆண்டு முதல் பலர் முறைகேடாக விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 23ம் தேதி இந்த நிலத்தின் பெயரே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தோணி குரூஸ் கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நில விற்பனை மோசடியில் ஆர்.டி.ஒ. சுந்தரேசன், தாசில்தார் பாண்டியன் ஆகிேயாரும் தொடர்புள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயகுமார் இந்த மனு மீது வழக்குப் பதிவு ெசய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கொடைக்கானல் ஆர்.டி.ஒ. சுந்தரேசன், தாசில்தார் பாண்டியன் ஆகிேயார் உள்பட 14 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.