வதந்தி பரப்பிய உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்!
சென்னை: தேனி மலைப் பகுதியில் பிடிபட்ட நக்சலைட் தலைவர் மகாலிங்கம் என்கிற நொண்டி மகாலிங்கம் தப்பி விட்டதாக வதந்தி பரப்பியதாக காவல்துறை இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிரடி வேட்டையில், போலீஸாரின் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் பிடிபட்டவர் மகாலிங்கம் (55). இவரது தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் காயமடைந்த அவரை சில நாட்களுக்கு முன்பு சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
அவரை பரிசோதித்த சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள், அவருக்கு சர்க்கரை வியாதி உள்பட பல உடல் நலக் கோளாறுகள் உள்ளன. எனவே உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
இதனால் ஒரு வாரத்திற்கு அவரை புழல் சிறையில் அடைத்து வைக்க போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மகாலிங்கம். அவர் இருந்த பிளாக்கில் அல் உம்மா கைதிகள், வீரப்பனின் கூட்டாளிகள் உள்பட 14 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருக்கும் அறையின் வெளிப் பகுதியில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு எளிதில் தப்ப முடியாதபடி கடும் பாதுகாப்புகள் நிறைந்தது இந்த பிளாக்.
மேலும் ரகசியக் காமராக்கள் மூலமும் இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந் நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் தப்பி விட்டதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. நகர் முழுவதும் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் மகாலிங்கம் சிறை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் போலீஸார் குழப்பமடைந்தனர். அவர் தப்பவில்ைல என பின்னர் சென்னை போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
மகாலிங்கம் தப்பியதாக தகவல் பரப்பியது யார் என்று விசாரித்தபோது உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் இந்த வதந்தியை பரப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனால் கடுப்பான அவர் மகாலிங்கம் தப்பி விட்டதாக தகவல் பரவினால் ஒட்டுமொத்த காவல்துறையும் கதி கலங்கிப் போகும், அலைக்கழிக்கப்படும் என்ற 'நல்ல' எண்ணத்தில் இப்படி வதந்தி பரப்பியிருக்கிறார்.
இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் உள்ளனராம்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications