தமிழத்தில் திடீர் கன மழை!!
Subscribe to Oneindia Tamil

தமிழத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இரவில் பனிப் பொழிவு காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் கோடி தமிழகத்தில் நல்ல மழை பெய்து வந்தது. இன்று அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.
இதேபோல திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த நிலையே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications