மோசடி மன்னன் ஜெகஜால லியாகத் அலிக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமண இணையதளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லியாகத் அலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
திருமண இணையதளங்களில் மாப்பிள்ளை போல தன்னைப் பற்றிய தகவல்களை பரப்பி, அதன் மூலம் நூற்றுக்கணக்கான பெண் வீட்டாரை ஏமாற்றி பெருமளவில் பண மோசடி செய்ததாக கடந்த ஆண்டு லியாகத் அலி கைது செய்யப்பட்டார்.
சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்ட லியாகத் அலி, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜாமீன் கோரி லியாகத் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், விசாரணை நிலையிலேயே வழக்கு இருப்பதால் ஜாமீன் தர இயலாது என்று கூறி லியாகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications