For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவையாறு கோவிலில் நவரத்தின ஒவியங்கள் திருட்டு!

By Staff
Google Oneindia Tamil News

திருவையாறு: திருவையாறு கோவிலில் நவரத்தின ஒவியங்கள் திருடப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது மேலதிருப்பூந்துருத்தி. இங்கு புகழ் பெற்ற பூங்காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் முன் மண்டபத்தில் திருஞான சம்பந்தர், நடராஜர் , முருகன் ஒவியங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த ஒவியங்கள் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட இந்த ஒவியங்கள் ஒவ்வொறுன்றும், தங்க இழைகளால் உருவாக்கப்பட்டது. நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டவையாகும். இதன் மதிப்பு சுமார் 1.50 லட்சம் ஆகும்.

நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கோவிலை திறந்து பார்த்த போது பழமையான நவரத்தின ஒவியங்கள் திருபட்டிருந்தன. இந்த ஒவியங்கள் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.

இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கோவில் பூசாரி மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரனை நடத்தினர்.

இந்த ஒவியங்களுக்கு வெளிநாட்டில் நல்ல விலையும், கிராக்கி உள்ளது என்பதால் வெளிநாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் முக்கிய பல கோவில் நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X