எலிக் காய்ச்சல் பீதியில் கன்னியாகுமரி மக்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் எலி காய்ச்சலுக்கு ஒருவர் இறந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே குறத்தியறை மடவிளகம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமைமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டாக்டர்கள் இசக்கி முத்துவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு மஞ்சள் காமலை நோய் முற்றி விட்டதாக கூறினர்.
அதனால் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் இசக்கி முத்துவை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இசக்கி முத்து இறந்து போனார்.
இசக்கிமுத்து இறப்புக்கு எலிகாய்ச்சல் தான் காரணம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் கன்னியாகுமரியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.