Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்.சி.வி. ஆபரேட்டர்கள் கைது-போலீஸ் மீது தயாநிதி மாறன் புகார்

Subscribe to Oneindia Tamil

Dayanidhi Maran
சென்னை: தமிழகம் முழுவதும் எஸ்.சி.வி. (சுமங்கலி கேபிள் விஷன்) கேபிள் டிவி ஆபரேட்டர்களை முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமலேயே போலீஸார் கைது செய்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தயாநிதி மாறன் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆணையர் அலுவலகத்திற்குள் சென்று புகார் மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் எஸ்.சி.வி.யின் கட்டமைப்புக்குள் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் எந்தவிதக் காரணமும் இன்றிக் கைது செய்து வருகின்றனர்.

நேற்று தென் சென்னையில் மட்டும் 25 பேரைக் கைது செய்துள்ளனர். இரவு நேரங்களில் வீடு வீடாகப் போய் கைது செய்கிறார்கள்.

இந்த கைது நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது என்று நம்புகிறேன். ஒரு வேளை இது அவருக்குத் தெரிய வந்தால், கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது என்றார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறனின் இந்தப் புகார் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக சமீபத்தில் சன் டைரக்ட் டிடிஎச் சேவையை சன் டிவி அறிமுகப்படுத்தியது.

இந் சேவையில் பல சலுகைகளையும் அது அறிவித்தது. இந்த நிலையில், எஸ்சிவியின் கீழ் வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் கைது செய்வதாக தயாநிதி மாறன் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+