தமிழுக்கு தடையில்லை: மலையாள அமைப்பின் மனு தள்ளுபடி
டெல்லி: தமிழகப் பள்ளிக்கூடங்களில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக மலையாள அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் வகையில் கடந்த ஆண்டு அரசு சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாளிகள் சமாஜம் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அதை வேறு பெஞ்சுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வேறு நீதிபதிகள் பெஞ்சுக்கு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மலையாளிகள் சமாஜத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தமிழக அரசின் சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.