சென்னை: ஓடும் ரயிலில் கத்தியால் தாக்கி கொள்ளை
சென்னை: ரயிலில் வழக்கறிஞரை கத்தியால் வெட்டி ரூ. 75,000 மதிப்புள்ள நகை, பணம், செல்போனை வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அனில்குமார் (31) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். தினமும் ரயில் மூலம் சென்னை வந்து செல்வார். நேற்றிரவு 11.15 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயிலில் பயணித்தார்.
பயணிகள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த நிலையில் அந்த ரயில் இரவு 12 மணிக்கு மீஞ்சூர் அருகே உள்ள ஏந்தியம்பாக்கம் நிலையத்தில் நின்றது. அப்போது 3 வாலிபர்கள் அந்தப் பெட்டியில் ஏறினர்.
மீண்டும் ரயில் புறப்பட்டவுடன் அந்த மூவரும் அனில்குமாரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டனர். அவர் தர மறுக்கவே அவரை கத்தியால் வெட்டினர்.
இதையடுத்து அவர் தன்னிடம் இருந்த ரூ.7,300யைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவரிடமிருந்த தங்க செயின், மோதிரம், செல்போன் ஆகியவற்றை அந்தக் கும்பல் பறித்தது. அவற்றின மதிப்பு ரூ. 75,000 ஆகும்.
ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அனில்குமார் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.
ஒவ்வொரு ரயிலிலும் 2 ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications