For Daily Alerts
Just In
பாக். தேர்தல்: இந்தியா கருத்து
கொல்கத்தா: தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ வேண்டும். ஜனநாயக சக்திகள் தழைத்தோங்க வேண்டும். பாகிஸ்தானிலும் இதே சூழல்தான் நிலவ வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய. வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தா வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் நமது அண்டசை நாடு. அங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ வேண்டும். அங்கு மட்டுமல்லாமல் இப்பிராந்தியமும் அமைதியுடன் திகழ வேண்டும்.
பாகிஸ்தானுடன் நமக்கு சிறப்பான உறவு உள்ளது. எனவே அங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவவும், ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையிலான சூழல் நிலவ வேண்டும் எனவும் இந்தியா விரும்புகிறது என்றார்.
Comments
Story first published: Wednesday, February 20, 2008, 9:49 [IST]