தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை-நிபந்தனை ரத்து

முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இந்த நிபந்தனை வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசின் சமூக நலத்துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, பிளஸ்டூவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு மேல் படிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் பழைய விதிமுறைப்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்தினார். அத்தோடு நில்லாமல், பழைய விதிமுறைப்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும், புதிய நிபந்தனையைக் கைவிட வேண்டும் என்று கோரி சமூக நலத்துறை அமைச்சர் மீரா குமாருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தப் புதிய நிபந்தனையைக் கைவிட தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவை அமைச்சர் மீரா குமார் நேற்று முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மீரா தெரிவித்தார்.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications