சென்ட்ரலில் பிரச்சனை-ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம்

இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை பேசின்பிரிட்ஜ் தளத்திலிருந்து சென்டிரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.
தடம் புரண்ட பெட்டிகள், மின் கம்பத்தின் மோதியதில் அது சாய்ந்து விட்டது. இதனால் மின்சாரம் தடைபட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடம் புரண்ட பெட்டிகளை மீட்கவும், மின்சார கம்பத்தை சரி செய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை சென்டிரலுக்கு வர வேண்டிய பல வெளியூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வர முடியாமல் எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டன. நீலகிரி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ரயில்கள் வராததாலும், ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் ரயில்கள் ரத்து குறித்தோ அல்லது எழும்பூருக்கு மாற்றப்பட்டது குறித்தோ முதலில் சரிவரத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் எழும்பூருக்கு ரயில்கள் சில மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு எழும்பூருக்கு விரைந்தனர்.
விடிய விடிய ரயில் பாதை சீராகவில்லை. இன்று காலையில்தான் மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு நிலைமை சீரடைந்து வருகிறது.
ரயி்ல்கள் ரத்து:
இந் நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 1.30க்கு ரகிளம்ப வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலும், திருப்பதியிலிருந்து சென்னை வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்-சென்னை வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்துடன் நிறுத்தப்படுகிறது.
பாட்னா-பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் பகல் 2 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் 3.20க்கு மாற்றப்பட்டுள்ளது. இவை இரண்டும் பெரம்பூரிலிருந்து கிளம்பும். எனவே பயணிகள் பெரம்பூரில் சென்று இந்த ரயில்களில் ஏறலாம்.
இது தவிர சென்னை சென்ட்ரலுக்கு வரும் மேலும் 4 ரயில்களும் எழும்பூருக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.
அந்த ரயில்களின் விவரம்:
லால்பாக் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை இன்டர்சிட்டி, பினாகி எக்ஸ்பிரஸ். இவற்றின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications