நாடாளுமன்றத்தில் அமளி- ஒத்திவைப்பு
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் விவசாயிகள் தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பிரச்சினை எழுப்பி கோஷம் போட்டதால் நண்பகல் 12 மணி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று 2008-09ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.
லோக்சபா கூடியதுமே கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவசாயிகள் தற்கொலை குறித்தும், அவர்களின் துயர நிலை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
அவர்களை அமருமாறு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பலமுறை கேட்டுக் கொண்டும் பலன் இல்லை. இதையடுத்து நண்பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல ராஜ்யசபாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கோஷமிட்டதால் ராஜ்யசபாவும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications