ரயில்வே பட்ஜெட்-கருணாநிதி வரவேற்பு, திருப்தி

ரயில்வே பட்ஜெட் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்து வகையிலும் மன நிறைவு அளிக்கும் ஒரு சிறந்த ரயில்வே பட்ஜெட்டை அளித்துள்ள ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை பாராட்டுகிறேன்.
குறிப்பாக சாமானிய மக்கள் பயணம் செய்யும் 2ம் வகுப்பு கட்டணத்தை 5 சதவீதமாக குறைத்திருப்பது பாராட்டுக்குரியது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், நமது மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விழுப்புரம் திண்டுக்கல் ரயில் பாதையை இரு வழித்தடமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மதுரை - போடி அகலப் பாதைத் திட்டம், ஈரோடு-பழனி, சென்னை-புதுச்சேரி-கடலூர் ஆகிய புதிய ரயில் திட்டங்கள், திருவள்ளூர்-அரக்கோணம் நான்காவது வழித்தடத் திட்டங்களும் இந்த ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பது தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகளாகும்.
அத்திப்பட்டிலிருந்து புத்தூர் வரை ஒரு புதிய வழித்தடத்தை அறிவித்திருப்பது எண்ணூர் துறைமுகத்திற்கு நன்மை.
பெரம்பூர் லோகோ பணிமனையை நவீனப்படுத்தும் திட்டத்ைத அறிவித்திருப்பது மகிழ்ச்சி. தமிழகத்துக்கு 8 புதிய ரயில்களையும், 4 ரயில்களை நீட்டித்தும் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
நாகப்பட்டனம்-வேளாங்கண்ணி புதிய ரயில் பாதைப் பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும் என்ற அறிவிப்பும், காரைக்குடி, மானாமதுரை திருவாரூர்-நாகூர் ஆகிய ரயில் வழித் தடங்களை அகலப் பாதையாக மாற்றும் பணிகளும் வரும் நிதியாண்டில் முடிக்கப்படும் என்ற அறிவிப்பும், இந்தப் பணிகளுக்குப் பின் சேலம், கடலூர், திருச்சி, மானாமதுரை ஆகிய வழித் தடங்களை அகலப் பாதையாக மாற்றும் பணிகளும் திருவண்ணாமலை, விழுப்புரம் வழித்தடத்தை அகலப் பாதையாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கன.
சென்னை மாநகர விரைவு ரயில் திட்டத்தின் 3வது கட்டமாக, வேளச்சேரியிலிருந்து புனித தோமையர் மலை வரையிலான திட்டம், ரூ. 496 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 2010 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு சென்னை மக்களுக்கு இனிய செய்தி.
காரைக்குடி- ராமநாதபுரம்-தூத்துக்குடி, கன்னியாகுமரி ரயில் பாதை, சிதம்பரம்-பெரம்பலூர்-ஆத்தூர்-தஞ்சாவூர்-அரியலூர் ஆகிய புதிய ரயில் பாதைகள் அமைப்பது குறித்தும், ஓமலூர், மேட்டூர் வழித் தடத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் குறித்தும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதும் வரவேற்க்கத்தக்க அம்சங்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications