கடனுக்கு 'சரக்கு'-மறுத்த டாஸ்மாக் கடை சூறை
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: கடனுக்கு மது தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குடி மகன் ஒருவர், டாஸ்மாக் மதுக் கடையை அடித்து நொறுக்கினார். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
தட்டம்பாறை அருகே உள்ள கீழசெக்காரகுடியை சேர்ந்த குருசாமி மகன் வெங்கடேசன். இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மதியம் 12.40 மணியளவில் சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் என்பவர் குடிபோதையில் வந்து வெங்கடேசனிடம் குவார்ட்டர் மது கடனுக்கு தருமாறும், பிறகு பணம் தருவதாகவும் கேட்டார்.
ஆனால் வெங்கடேசன் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், ஒரு கம்பை எடுத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்.
இது குறித்து வெங்கடேசன் தட்டாம்பாறை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா பெருமாளை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications