For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மனி சூறாவளி-பெரும் விமான விபத்து தவிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Plane
ஹேம்பர்க்: கடும் சூறாவளிக் காற்றுக்கு இடையே ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் தட்டுத்தடுமாறி, ரன் வேயில் இறக்கை மோதிய நிலையில் மீண்டும் வானி்ல் பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மியூனிக் நகரில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஏர்பஸ் 320 ரக விமானம் 131 பயணிகளுடன் ஹாம்பர்க் வந்தது. அப்போது அங்கு திடீரென கடும் சூறாவளிக் காற்று வீசியது.

இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினர் விமானிகள். சுமார் 144 மைல் வேகத்தில் தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயை எட்டியபோது சூறாவளிக் காற்றால் தள்ளாடியது.

விமானம் ரன் வேயை விட்டு விலகி இடதுபுறமாக பறந்தது. அதை விமானிகள் தி்ருப்ப முயன்றபோது கடும் காற்றினால் அது கட்டுப்பாட்டை இழந்தது.

இதன் இடதுபுற இறக்கையின் நுனிப் பகுதி ரன் வேயின் அருகே இருந்த புல்வெளியில் உரசியது. இதையடுத்து விமானத்தை தரையிறக்குவதை உடனடியாக தவிர்த்துவிட்ட விமானிகள மீண்டும் விமானத்தை விண்ணி்ல் பாயச் செய்தனர். இதனால் விமானம் சூறாவளியில் தள்ளாடியபடி மீண்டும் பறந்தது.

இதையடுத்து வெகு தூரம் பறந்துவிட்டு, காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்த பின் மீண்டும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் விமானிகள்.

கடந்த சனிக்கிழமை இச் சம்பவம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X