தேவர் சிலை பாதுகாப்புக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
நெல்லை: நெல்லை அருகே தேவர் சிலை பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சமீபத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 57 தேவர் சிலைகள், 19 அம்பேத்கார் சிலைகள், 6 இம்மானுவேல் சிலைகள் மற்றும் 2 நினைவு ஸ்நூபிகளுக்கு போலீசார் பாதுகாப்புக்குகாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதம் நடைபெறமால் இருக்க டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர் ஆகியோரின் உத்தரவின்பேரில் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் நடந்து வருகிறது.
இதற்கிடையே பாளை அரியகுளம் அருகே உள்ள உத்தம பாண்டியன்குளத்தில் தேவர் சிலை பாதுகாப்புக்காக ஏட்டு ஐய்யப்பன் உள்ளிட்ட இருவர் சென்றனர்.
அப்போது அவர்களை அதே ஊரை சேர்ந்த அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்தனர்.
எங்கள் ஊருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி அரிவாளால் சரமரியாக வெட்டினர். இதில் ஏட்டு ஐயப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.