காஷ்மீரில் இன்றும் நிலநடுக்கம்-15 நாட்களில் ஐந்தாவது முறை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 15 நாட்களில் ஏற்பட்டுள்ள ஐந்தாவது நிலநடுக்கம் இதுவாகும்.
ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளி்ல் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 4.27 மணிக்கு உணரப்பட்டது. இதையடுத்து வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடினர்.
ரிக்டர் அளவுகோளில் இது 3.9 புள்ளிகளாகப் பதிவானது.
கடந்த 20ம் தேதி முதல் இதுவரை 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதால் காஷ்மீரில் பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications