ரூ. 20 லட்சம் வரை வீட்டுக் கடன்: வட்டி குறைகிறது
டெல்லி: வங்கிகள் வழங்கும் ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரியுள்ளார்.
இதன்மூலம் வீடு வாங்கும் கனவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார் சிதம்பரம்.
அவர் கூறுகையில்,
வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோரில் 80 சதவீதம் பேர் ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான கடனைத் தான் பெறுகிறார்கள். இவர்களில் பணத்தை சரியாக திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இதனால் வங்கிகளுக்கு பெரிய அளவில் ரிஸ்க்கும் இல்லை.
ரூ. 20 லட்சத்துக்கு அதிகமான கடன் வாங்குபவர்கள் தான் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மிக அதிக அளவில் தவறு செய்கிறார்கள்.
இதனால் ரூ. 20 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி விரைவில் உத்தரவு பிறப்பிக்கும்.
கடந்த பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5.9 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இது 8.8 சதவீதமாக உள்ளது என்றார் சிதம்பரம்.