சொந்த நிலம் இருந்தால் அரசின் மகப்பேறு உதவி கிடையாது!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சொந்த நிலம் வைத்திருப்போர், வியாபாரம் செய்வோருக்கு அரசின் மகப்பெறு உதவித் தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி பெண்களின் பிரவசத்திற்காக உதவிகள் வழங்கப்படுகிறது. பிரவசத்திற்கு முன் 3 ஆயிரமும், பிரவசத்திற்கு பின் 3 ஆயிரமும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு திட்டத்தின் கீழ் நிலையான சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள், அரசு நிறுவனங்கள், அரசு சார் அமைப்புகள் பணிபுரிபவர்களுக்கு உதவிகள் வழங்கப்படமாட்டாது.

மேலும் சொந்தமாக வீடு, நிலங்கள் வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், செல்போன், ஆட்டோ, பைக் ஆகியவை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கும் இத்திட்ட உதவிகள் வழங்கப்படாது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு, தகுதியுடையவர்களுக்கு மட்டும் இனி மகப்பெறு உதவி தொகை வழங்கப்படும்.

விண்ணப்பித்தும் உதவி கிடைக்காதவர்கள் கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+