துபாயில் ஈமான் அமைப்பின் மீலாது சொற்பொழிவு
துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்), சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையுடன் இணைந்து துபாய் தேரா கோட்டைப் பள்ளியில் இன்று முதல் 18ம் தேதி வரை தொடர் மீலாது நபி சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தினசரி இஷா தொழுகைக்குப் பின் 9.00 மணி முதல் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு அழைப்பாளர் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
இதில் அகிலத்தின் அருட்கொடையாய் இந்த அவனியில் அருளப்பட்ட அஹ்மது நபி (ஸல்) அவர்களின் அருமந்த வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050-475 30 52 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications