நாகாலாந்து தேர்தல்: ஆட்சியைப் பிடிப்பதில் இழுபறி
கொஹிமா: நாகாலாந்து சட்டசபைத் தேர்தலில் இழுபறி ஏற்பட்டுள்ளது. நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 29 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும் கிடைத்துள்ளன.
நாகாலாந்து மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.
தொடக்கத்திலிருந்தே நாகாலாந்து மக்கள் முன்னணிக்கும், காங்கிரஸுக்கும் இடையே இழுபறி காணப்பட்டது.
மொத்தம் உள்ள 60 இடங்களில், 3 தொகுதிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து 57 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 29 இடங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகளிலும் முன்னிலை கிடைத்தது. 6 இடங்களில் பிற வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.
இரு கூட்டணியும் சம பலத்தில் முன்னிலையில் இருப்பதால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள 3 தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications