திருச்சியில் இன்று தே.மு.தி.க. மகளிர் பேரணி-பிரமாண்ட ஏற்பாடுகள்
திருச்சி: உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் இன்று தேமுதிக சார்பில் மகளி்ர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்கிறது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரமேலதா துவக்கி வைக்கும் இந்தப் பேரணி தென்னூர் உழவர் சந்தை திடலுக்கு வருகிறது. அங்கு விஜய்காந்த் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
கரூர் பைபாஸ் ரோடு, கெயிட்டி தியேட்டர் ரோடு வழியாக நடைபெறும் இந்தப் பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பெண்கள் திருச்சியில் குவிந்துள்ளனர்.
பேரணியில் பிரேமலதாவும் நடந்து வருகிறார். இதில் பெண்களே டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை ஓட்டி வரவுள்ளனர். 32 அலங்கார வாகனங்களும் இடம் பெறுகின்றன.
பேரணியை தென்னூர் மேம்பாலம் இ.பி. அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து விஜய்காந்த் பார்வையிடுகிறார்.
பேரணியையொட்டி திருச்சி நகர் முழுவதும் தே.மு.தி.க. கொடிகள், தோரணங்களும், பேனர்கள், கட்-அவுட்கள் அமர்களப்படுகின்றன.
பிரமாண்டமான விஜயகாந்த் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications