விலைவாசியை கட்டுபடுத்த முடியவில்லை-சோனியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதாக கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியே ஒப்புக் கொண்டுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய சோனியா,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலைகளை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் தொடர்ச்சியாக பிற பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இருந்தாலும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு மண்ணெண்ணெய் விலையை உயர்த்தவில்லை.
விலை உயர்வை தடுக்க உரிய நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் எடுத்து வருகிறார் என்றார் சோனியா












Click it and Unblock the Notifications