தேவர் சிலை உடைப்பு-திராவிட விழிப்புணர்ச்சி கழகம் கெடு
விருதுநகர்: விருதுநகர் அருகே சங்கரங்கபுரத்தில் தேவர் சிலையை உடைத்தவர்களை மார்ச் 12 க்குள் தமிழக அரசு கைது செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேடும் என அரசுக்கு திராவிட விழிப்புணர்ச்சி கழகம் கெடுவுடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜபாளையம் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக விரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந் நிலையில் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் சங்கரலிங்கபுரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் பி.டி.அரசகுமார், தமிழகத்தில் தேவர் சிலை உடைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது வருத்தம் தரும் விஷயம். இதை தமிழ அரசு உடனே தடுக்க வேண்டும்.
சங்கரலிகாபுரத்தில் உடைக்கப்படட் தேவர் சிலைக்கு பதிலாக எங்கள் கட்சி சார்பில் ரூ.1.5 லட்சம் செலவில் வெண்கல சிலை வைக்கப்படும். இதற்காக சிலை அமைப்பு குழு உருவாக்கப்படும்.
தேவர் சிலையை உடைத்தவர்களை மார்ச் 12 க்குள் தமிழக அரசு கைது செய்யாவிட்டால் தென் மாவட்டங்களில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.