அடுத்தாண்டு முதல் ஏடிஎம்களில் சேவை கட்டணம் ரத்து

Subscribe to Oneindia Tamil

மும்பை: எந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் எந்த வங்கியின் ஏடிஎம்களிலும் இலவசமாக பணம் எடுக்கும் முறை வரும் 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

அதே நேரத்தில் எந்த வங்கியிலும் பேலன்ஸ் என்கொயரி பார்ப்பது உடனடியாக இலவச சேவையாகிறது.

ஏடிஎம் மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளுக்கும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் வருகிறது. அதுவரையில், வேறு வங்கியின் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுத்தாலும் அதிகபட்சமாக ரூ. 20 மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+