மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை
கன்னியாகுமரி:மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறவுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள் விழா மிக விமரிசையாக நடக்கும்.
பெண்கள் இருமுடி கட்டி அம்மனை வழிபட்டு கடலில் தீர்த்தமாடி ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை தரிசிப்பர்.
இந்த ஆண்டு விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழா நிறைவு நாளான இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. இப்பூஜையை தொடர்ந்து கொடி இறக்கப்படும்.
ஆரல்வாய்மொழி கோயில் கும்பாபிஷேக விழா:
இதற்கிடையே இம் மாவட்டத்தின் இன்னொரு முக்கிய ஆலயமான ஆரல்வாய்மொழி கரடிமாடசுவாமி கோயில் கும்பாபிஷேகவிழா இன்று தொடங்குகிறது.
மூன்று நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications