சென்னையில் பரவுது சின்னம்மை: வாலிபர் பலி, 60 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பரவி வரும் சின்னம்மை பாதிப்பினால் ஒரு வாலிபர் பலியாகியுள்ளா. 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோடைக் காலத்தில் சின்னம்மை போன்ற தொற்று நோய்கள் பரவும். ஆனால், இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே வடசென்னை பகுதியில் சின்னம்மை பரவிவிட்டது.
கடந்த ஒரே வாரத்தில் 12 குழந்தைகள் உள்பட 60 பேர் சின்னம்மையினால் பாதிக்கப்பட்டு தண்டையார்பேட்டை தொற்று நோய்த் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் தினசரி 5 முதல் 10 பேர் இங்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில், அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஏழுகிணறு வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த துரைராஜ் (24) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications