For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் நில பிரச்சனை-ஏப்ரல் 8ல் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விஜயகாந்த் மீதான நில உச்ச வரம்பு ஆணைய விசாரணை ஏப்ரல் 8ல் நடக்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிக சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பான புகாரை நில உச்ச வரம்பு ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த புகாரில் மதுராந்தகம் பகுதியில் உள்ள விளாகம், அருங்குருக்கை உள்ளிட்ட 5 கிராமங்களில் விஜயகாந்த்திற்கு கூடுதல் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளிக்க நில உச்ச வரம்பு கமிஷன் விஜயகாந்த்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு விஜயகாந்த் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு விஜயகாந்த்தின் வழக்கறிஞர்கள் நில சீர் திருத்த இணை கமிஷனர் பாலசுப்பிரமணி முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து அடுத்த மாதம் 8 ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X