அண்ணா பல்கலையில் புகை பிடிக்க தடை

மேலும் பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்தவும் தடை போடப்பட்டுள்ளது.
அதே போல பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடைகள், பல்கலைக்கழகத்துக்கு வெளியே 100 அடி தூரத்தில் உள்ள கடைகள் ஆகியவற்றில் சிகரெட், பீடி போன்றவை விற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழக வளாகம் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் புகைப்பிடிப்பு இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
புகை, புகையிலையால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறோம்.
இந்த வளாகத்தில் புகைப்பிடிப்பவர்களை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் தவறு செய்பவர்கள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். மீண்டும் தவறு செய்வர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பெற் றோர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
பல்கலைக்கழக வளாகத்தை புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு சுகாதாரத்துறையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படும் முதல் கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன்கள் பயன்படுத்தவும், அரைகுறை உடைகள் அணிந்து வரவும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications