For Quick Alerts
For Daily Alerts
Just In
நீதிபதி அசோக்குமார் திடீர் இடமாற்றம்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருகிற 25ம் தேதிக்குள் அவர் புதிய பொறுப்பை ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுடன், குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அசோக்குமார் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, March 13, 2008, 9:35 [IST]