For Daily Alerts
Just In
20ஐ கேலி செய்த 40 கைது
நெல்லை: நெல்லையில், 20 வயதுப் பெண்ணைக் கேலி செய்ததாக 40 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை, பேட்டையை சேர்ந்தவர் மீரா (20). இவர் நெல்லை டவுனில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றார்.
அப்போது, அவரது பின்னால் வந்த, நெல்லை டவுனை சேர்ந்த பழனி (40) மீராவை பாட்டு பாடி கேலி செய்து கொண்டே பின் தொடர்ந்தார்.
இதையடுத்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் மீரா. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், பழனியைக் கைது செய்தனர்.
Comments
Story first published: Thursday, March 13, 2008, 9:43 [IST]