For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிச்சையெடுக்கும் போராட்டம்: சரத் கட்சியினர் 7 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் தடையை மீறி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் மூடிக்கிடக்கும் பேட்டை நுற்பாலை உள்ளிட்ட 9 ஆலைகளை திறக்ககோரி அய்யா தார்மீக வழி பேரவை சார்பில் நெல்லை ஜங்ஷனில் 12ம் தேதி பிச்சையெடுககும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை.

இது தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக அய்யா தார்மீக வழி பேரவை தலைவர் பாலமுருகன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சேவியர் மற்றும் மயில்வாகணன், நாராயணன் உள்ளிட்ட 7 பேர் ஜங்ஷன் ரோட்டிற்கு காரில் வந்தனர்.

ஆனால் அவர்களை போராட்டம் நடத்த விடாமல் தடுத்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X