தண்டவளத்தில் விரிசல்-மும்பை எக்ஸ்பிரஸ் தப்பியது
நாகர்கோவில்: நாகர்கோவில் - நெல்லை இடையே தண்டவளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் மும்பை எக்ஸ்பிரஸ் தப்பியது.
நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வாரத்தில் 4 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் ரயில் புறப்பட்டு சென்றது.
அப்போது வழக்கமான தண்டவாள சோதனையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் செங்குளம் அருகே தண்டவாளத்தில் வெல்டிங் பகுதி உடைந்து விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக மும்பை ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்தினர். இதனால் செங்குளம் அருகே காட்டு பகுதியில் ரயிஸ் அரைமணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விரிசல் சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.
சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications