இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா!
லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா!
தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது.
ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம் அவனது ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதுவே பெரியவர்களுக்கு எழுச்சியைத் தூண்ட உதவுகிறது.
ஆலிவர் போன்ற அரிய வியாதிக்காரர்களுக்கு இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த நாளங்கள் அடைபடாமல் காக்க உதவுகிறது.
இதுகுறித்து ஆலிவரின் தாயாரும், நர்சுமான சாரா கூறுகையில், வயாகரா மிகவும் விலை உயர்ந்த மருந்து. ஆனால் நுரையீரல் ரத்த அழுத்த நோய்க்கு இது மிகவும் குறைந்த விலை மருந்தாகும் என்கிறார்.
பல்மனரி ஹைப்பர்டென்ஷன் எனப்படும் இந்த நுரையீரல் ரத்த அழுத்தத்தால், நுரையீரலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகிறது. இதனால் இதயம் பாதிக்கப்படும். ரத்தத்தில் ஆக்சின் அளவு குறைகிறது. இதனால் மூச்சுத் திணறல், மூச்சடைப்பு ஆகியவை ஏற்படும்.
கடும் சளி, மூச்சு விடுவதில் பிரச்சினை, மூக்கிலிருந்து ரத்தம் வருவது, சோர்வு, இதய வலி ஆகியவையே இந்த நோயின் அடையாளங்கள்.
இந்த நோய் தீவிரமடையும்போது இதயம் பழுதடையும் ஆபத்து உள்ளது.
இந்த நோய் வந்தால் அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவர்களால் உயிர் வாழ முடியும். எவ்வளவுதான் மருந்து சாப்பிட்டாலும் அந்த காலகட்டம் வரைதான் வாழ முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
ஆலிவர் தற்போது ஒரு சில்டெனாபில் (வயாகரா) மாத்திரையை நான்காக பிரித்து நான்கு வேளைக்கு சாப்பிடுகிறான்.
அவனது நிலைமை மோசமாகும்போது மருந்தின் அளவை டாக்டர்கள் கூட்டியாக வேண்டும். ஆனால் இது எத்தனை காலத்திற்குக் கை கொடுக்கும் என்பதை டாக்டர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
ஆலிவர் வளர, வளர மிகவும் விலை உயர்ந்த மருந்துகளை அவன் நாட வேண்டி வரும். அப்போதுதான் உயிரைப் பிடித்து நிறுத்த முயற்சிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications