வங்கி அதிகாரியின் ரூ. 1 கோடி வரி ஏய்ப்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வங்கி அதிகாரியாக உள்ள ஒரு சிறிய தொழிலதிபரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடி வரை வரி எய்ப்பு செய்தது தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
கடந்த 3 தினங்களாக நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில தொழிலதிபர்கள், டாக்டர்களி்ன் வீடுகளில் வருமான வரிததுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் நாகர்கோவிலில் உள்ள பிரபல தொழிலதிபர் வீடும் சிக்கியது. இவர் வங்கி ஒன்றில் மேனேஜராக உள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஒரு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறி்முதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வாங்கி குவித்துள்ள சொத்துகளின் மதிப்பு பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்.